சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தாங்கள்
ஆட்டோவில் செல்ல வேண்டிய பகுதிக்கு முன்கூட்டியே அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி
ஆட்டோவில் பயணம் செய்யும் பிரீபெய்டு ஆட்டோ திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை தாம்பரம் ரெயில் நிலையத்தில் செயல்படுத்த
ரெயில்வே நிர்வாகம் மற்றும் ரெயில்வே போலீஸ் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தாம்பரம் ரெயில் நிலையத்தின்
முகப்பு பகுதியில் 65 ஆட்டோக்கள் கொண்ட பிரீபெய்டு ஆட்டோ பூத்
திறப்பு விழா அண்மையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ்
சூப்பிரெண்ட் கயல்விழி தலைமை தாங்கினார். எழும்பூர் ரெயில்வே
போலீஸ் உதவி சூப்பிரெண்ட் பொன்ராமு வரவேற்றார்.
‘பிரிபெய்டு’ ஆட்டோ திட்டத்தை தமிழக ரெயில்வே காவல் துறை தலைவர் சீமா அகர்வால் தொடங்கி வைத்தார்.
இதில் ரெயில்வே உயர் அதிகாரி காயத்ரி, ரெயில்வே
காவல் துறை துணை தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment