சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி முத்துரங்கம் பூங்கா ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. புதுப்பொலிவுடன் திகழும் இந்த பூங்கா அக்டோபர் 15 ஆம் தேதி (2013) திறக்கப்பட்டது.
முத்துரங்கம் பூங்கா - தாம்பரம் நகராட்சியில் 3.78 ஏக்கரில் நகரின் மையபகுதியில் உள்ளது. இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ரூ.1.04 கோடி செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டது.
பூங்காவின் சுற்றுச்சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பசுமை புல்வெளிகள், செயற்கை குளம், விலங்குகளின் சிலைகள், செயற்கை நீருற்றுகள், சிறுவர் விளையாட்டு திடல், பூப்பந்து விளையாட்டு திடல், 725 மீட்டர் நீளம் நடைபாதை, பொதுமக்கள் பயன்படுத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment