தாம்பரம் நகராட்சி முழுக்க உள்ள தேநீர் கடைகளில் அண்மையில் மாவட்ட நியமன அலுவலர் திரு. பரணிதரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு. மணிகண்டன் (தாம்பரம் நகராட்சி), திரு. வேலவன் (பல்லாவரம் நகராட்சி) ஆகியோர் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது தாம்பரம் நகரத்தில் உள்ள சாலையோர தேநீர் கடைகளில் சாயம் கலந்த தேயிலை தூள் மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலி டீத்தூள் அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் அனைத்து கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
“இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். தாம்பரம் நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரிப்பது, தயாரிப்பு தேதி இல்லாமல் இருப்பது குறித்து தாம்பரம் நகராட்சி உணவு அலுவலருக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என அதிகாரிகள் கூறினர்.
அப்போது தாம்பரம் நகரத்தில் உள்ள சாலையோர தேநீர் கடைகளில் சாயம் கலந்த தேயிலை தூள் மூலம் தேநீர் தயாரித்து விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலி டீத்தூள் அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் அனைத்து கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
“இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். தாம்பரம் நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரிப்பது, தயாரிப்பு தேதி இல்லாமல் இருப்பது குறித்து தாம்பரம் நகராட்சி உணவு அலுவலருக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என அதிகாரிகள் கூறினர்.
0 comments:
Post a Comment